முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை முருகன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், பழம், விபூதி, தயிர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கோவிலை மலையை சுற்றி வந்து முருகனை வழிபட்டனர்.இதேபோல் காகிதபுரம், பவித்திர், வெண்ணெய்மலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story