பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

பெரம்பலூர்

14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான சாலையோர மிதிவண்டி போட்டி, சிலம்பம், ஜூடோ ஆகிய போட்டிகள் நேற்று தனித்தனியாக நடத்தப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த இந்த போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட சாலையோர மிதிவண்டி போட்டிகளில் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான சந்தோஷ், பால்ராஜ், கோபிநாத் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி மாணவர்களுக்கான நீச்சல், தேக்வாண்டோ, வாள்வீச்சு, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.


Next Story