நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் போராட்டம்


நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரியில் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் எதிரில், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் செழியன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பூபதி, மாநில செயலாளர் பெருமாள், பட்டு வளர்ச்சித்துறை செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டதலைவர் சந்திரன் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story