தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள்


தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை    விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள்
x

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

கடலூர்


இதுதொடர்பாக கடலூா் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


கடலூர் மாவட்டத்தில் கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் நெய்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022-ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை இணையவழி கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.

இதற்காக www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதனால் மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை

மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்களைwww.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை, அதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சார பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் வகையில் கைக்கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.

20-ந் தேதி கடைசிநாள்

மேலும் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி, உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

எனவே தொழிற்பயிற்சி படிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலமாக அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் பயன்பெறலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 04142 - 290273 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story