ரசாயன திரவம் குடித்த மாணவன் சாவு


ரசாயன திரவம் குடித்த மாணவன் சாவு
x

உவரி அருகே ரசாயன திரவம் குடித்த மாணவன் இறந்தான்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே உள்ள குட்டம் தஞ்சபுரத்தை சேர்ந்தவர் தர்மர். இவருடைய மகன் ஏசுவடியான் (வயது 13). குட்டம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று பெயிண்டில் கலக்க பயன்படுத்தும் ரசாயன திரவம் (தின்னர்) குடித்துவிட்டு மயங்கி கிடந்தான். அவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தான். சம்பவம் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story