குளத்தில் குதித்து 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை


குளத்தில் குதித்து 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

அச்சன்புதூர் அருகே குளத்தில் குதித்து 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்

தென்காசி

கடையநல்லூர்:

அச்சன்புதூர் அருகே குளத்தில் குதித்து 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அச்சன்புதூர் அருகே உள்ள பண்பொழி பிட்டு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகள் கற்பகவல்லி (வயது 17). இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் கற்பகவல்லி படிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல் தொடர்ந்து செல்போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்துள்ளார்.

குளத்தில் குதித்து தற்கொலை

இதனால் கற்பகவல்லி தனது தாயிடம் தகராறு செய்து கோபித்துக் கொண்டு நேற்று முன்தினம் அருகில் உள்ள பெரிய குளத்துக்கு சென்று தண்ணீரில் குதித்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கற்பகவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கற்பகவல்லியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story