மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

தென்னையில் மறுநடவு மற்றும் புத்துயிர் அளிக்கும் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

தென்னையில் மறுநடவு மற்றும் புத்துயிர் அளிக்கும் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானியம் பெறலாம்

தென்னையில் மறுநடவு மற்றும் புத்துயிர் அளிக்கும் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். தென்னை சாகுபடியில் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 7,500 எக்டேருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆங்காங்கே பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட மரங்கள், காய்க்காத மரங்கள், வயது முதிர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. இவற்றை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு தென்னை மரம் ஒன்றிற்கு ரூ.1,000 வீதம் அதிகபட்சமாக ஒரு எக்டரில் 32 மரங்களுக்கு மானியம் பெறலாம்.

உழவன் செயலி மூலம் முன்பதிவு

தென்னை மரங்களை அப்புறப்படுத்திய பிறகு அவ்விடத்தில், புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு தென்னங்கன்று ஒன்றிற்கு ரூ.40 வீதம் மானியமும், அதிகபட்சமாக ஒரு எக்டரில் 100 தென்னங்கன்றுகளுக்கு மானியம் பெறலாம். ெதன்னந்தோப்புகளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தை செயல்படுத்திட முதலாம் ஆண்டு எக்ேடர் ஒன்றுக்கு ரூ.8,750-ம், இரண்டாம் ஆண்டு எக்ேடர் ஒன்றுக்கு ரூ.8,750-ம் மானியமாக பெறலாம். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை நேரில் அணுகி அல்லது உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story