ஆட்டோ டிரைவர்களிடையே திடீர் மோதல்


ஆட்டோ டிரைவர்களிடையே திடீர் மோதல்
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:45 PM GMT)

திண்டிவனம் பகுதியில் ஆட்டோ டிரைவர்களிடையே திடீர் மோதல் 7 பேர் மீது வழக்கு

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள அன்னம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 52). திண்டிவனம் காலேஜ் ரோடு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் லியாகத் அலி மகன் சாதிக் பாஷா(38). ஆட்டோ டிரைவர்களான இவர்கள் திண்டிவனம் பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனத்தில் லட்சத்தீப திருவிழா நடைபெற்று வருவதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள சுப்ரமணியர் கோவில் தெரு, நேரு வீதி சந்திப்பில் சாதிக் பாஷா தனது ஆட்டோவை நிறுத்தினார். ஆனால் இதற்கு அங்குள்ள ஆட்டோ நிறுத்தத்தை சேர்ந்த சண்முகம் ஆட்டோவை இங்கே நிறுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென மோதல் உருவானது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன் பேரில் சாதிக்பாஷா மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சித்திக் பாஷா(30), ஹக்கீம்(28), சதீஷ்குமார்(21) ஆகிய 4 பேர் மீதும், சண்முகம், இவரது தரப்பை சேர்ந்த லோகேஷ்(24), நாராயணசாமி(33), ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story