மயங்கி விழுந்து மாணவர் திடீர் சாவு


மயங்கி விழுந்து மாணவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:45 PM GMT)

மயங்கி விழுந்த மாணவர் இறந்தார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் இரண்டாம் ஆண்டு படித்தவர் கோகுல் (வயது 19). இவரது சொந்த ஊர் திருவாரூர். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று கல்லூரியில் விளையாட்டு தினம் நடைபெற்றது. விளையாட்டுகளில் பங்கேற்ற மாணவர்களை மற்ற மாணவர்கள் மைதானத்தை சுற்றிலும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வந்தனர். கோகுலும் நண்பர்களோடு சேர்ந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.உடனடியாக கல்லூரி நிர்வாகம் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.இது குறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story