காரிமங்கலம் அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை


காரிமங்கலம் அருகே  பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
x

காரிமங்கலம் அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் சத்யராஜ் (வயது24). பெயிண்டர். இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சத்யராஜ் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story