மருத்துவ உபகரண கடை உரிமையாளர் தற்கொலை


மருத்துவ உபகரண கடை உரிமையாளர் தற்கொலை
x

தர்மபுரியில் மருத்துவ உபகரண கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

தர்மபுரி நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 45). மருத்துவ உபகரணங்கள் கடை உரிமையாளர். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடந்த 6 மாத காலமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதேஷ் உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story