பள்ளிபாளையம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை


பள்ளிபாளையம் அருகே  மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
x

பள்ளிபாளையம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே உள்ள ஐந்துபனை பகுதியை சேர்ந்தவர் லெனின். இவருடைய மகன் சாக்ரடீஸ் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள வயல் பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சாக்ரடீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story