விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே உள்ள திம்மனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 22). கூலித்தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையான இவர் சம்பவத்தன்று தனது தாய் மற்றும் நண்பர்களிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் பிலிமுத்திரை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story