கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x

மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சாஸ்திரமுட்லு கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பன். தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் (வயது45). இவர்களுக்கு நவீன்குமார் என்ற மகனும், நவீனா என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த காளியம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே அந்த பகுதியில் உள்ள கிணற்றில் காளியம்மாள் பிணமாக மிதந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story