பெற்றோர் இறந்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


பெற்றோர் இறந்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Sep 2022 6:45 PM GMT (Updated: 19 Sep 2022 6:45 PM GMT)

காரிமங்கலம் அருகே பெற்றோர் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே பெற்றோர் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வாலிபர் தற்கொலை

காரிமங்கலம் அருகே உள்ள கொட்டுமாரணஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் ராஜா (வயது27). கூலித்தொழிலாளி. சின்னசாமியும், அவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் ராஜா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும் இவர் காரிமங்கலம் அருகே கண்ணன்கொட்டாய் கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். பெற்றோர் இறந்ததால் தனியாக இருந்த ராஜா மனமுடைந்து விரக்தியில் இருந்துள்ளார். நேற்று தனது சகோதரி வீட்டுக்கு அவர் சென்றார். பின்னர் அங்குள்ள மாட்டு கொட்டகையில் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் இறந்த விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story