விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:45 PM GMT)

கெலமங்கலம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள ஜெக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 32.) விவசாயி. இவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த பிரதீப் நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story