விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை


விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:47 PM GMT)

கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

விவசாயி

கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்படமுத்தூரை சேர்ந்தவர் சேட்டு (வயது 40). விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் மேட்டுப்பாறை பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெல்டிங் தொழிலாளி

ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளியை சேர்ந்தவர் வடிவேல் (28). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story