விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:47 PM GMT)

ஓசூரில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் பேகேப்பள்ளி அருகே உள்ள பாகூரை சேர்ந்தவர் கோபால் (வயது 28). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை மனைவி கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த கோபால், பாகூர் ஏரி அருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story