வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூர் நகர போலீஸ் சரகம் மாருதி நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது32). இவர் சிற்ப வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் இருந்தவர்களிடம் பேசிவிட்டு தனது அறைக்கு சென்றார். திடீரென தனது அறையை மூடிவிட்டு அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக திருவாரூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து அசோக்குமார் உடலை கைப்பற்றி திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இகுதுறித்து அசோக்குமார் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story