ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம்


ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம்
x

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சார்ந்த ஆண், பெண் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க உபகரணங்கள் வாங்க நிதி வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு குழுவிற்கு தோராய செலவினமாக ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்படவுள்ளது. மேலும் குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமையும், 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாகவும் அதில் 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தலும் அவசியம் ஆகும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த நபர்கள் தகுதியான குழுக்களை அமைத்து அக்குழுவின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story