தமிழக அரசு பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழக அரசு பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

தமிழக அரசு பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இரு தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலைகளும் அடுத்த சில நாட்களில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட மூன்றாவது விலை உயர்வு ஆகும்.

தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த விலை உயர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவார்கள். 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

பால் சந்தையில் ஆவினின் பங்கை 50 சதவீதமாக ஆக உயர்த்துவது, பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது ஆகியவற்றின் மூலமாகத் தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story