போக்சோ சட்டத்தில் இளம்பெண் கைது


போக்சோ சட்டத்தில் இளம்பெண் கைது
x

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்ணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையை அடுத்த ஆலமழை வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் சிவரஞ்சனி(வயது 19). இவர், 17 வயது சிறுவனுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிவரஞ்சனி அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவரஞ்சனியை கைது செய்தனர்.


Next Story