புளியங்குடி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை


புளியங்குடி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:46 PM GMT)

புளியங்குடி அருகே, கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே, கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளம்பெண்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை சி.எஸ்.எம். தெருவை சேர்ந்தவர் உதயகுமார்.

இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 17). 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர் வீட்டில் இருந்து வந்தார்.

இதனிடையே அவரது பெற்றோர் படிப்பை தொடருமாறு மகளிடம் கூறியுள்ளனர். ஆனால் கிருஷ்ணவேணி, படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி, நேற்று முன்தினம் பகல் ஊருக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த கிருஷ்ணவேணிக்கு ஒரு சகோதரி உள்ளார்.



Next Story