ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது


ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
x

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நெல்லை அருகே நெடுங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 1,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிரைவரான களக்காடு பத்மநேரியை சேர்ந்த இளையமுத்து (வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி, லோடு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story