பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருமணம் ஆன பெண்ணுடன் மலர்ந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

காதல்

கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையத்தை சேர்ந்தவர் வீரமணி(வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணை கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த வீரமணியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீரமணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டுக் கொண்டார்.

தற்கொலை

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் செல்லாண்டிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story