மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
x

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கொங்கந்தான்பாறை பகுதியை சேர்ந்தவர் முப்புடாதி (வயது 33). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லையில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story