கோவில் கொடை விழா


கோவில் கொடை விழா
x

இட்டமொழி அருகே கோவில் கொடை விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

இட்டமொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நான்கு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் கோவில் கும்பாபிஷேகம், அன்னதானம், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரண்டாம் நாள் பால்குடம் ஊர்வலம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது. மூன்றாம் நாள் நடைபெற்ற பிரதான கொடை விழாவில் மஞ்சள்பெட்டி ஊர்வலம், சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு பூக்குழி இறங்குதல், சப்பரபவனி நடைபெற்றது. நான்காம் நாள் பக்தர்கள் பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடைவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story