விசைப்படகு மீனவர்கள் 63 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்


விசைப்படகு மீனவர்கள் 63 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்
x

தஞ்சை மாவட்டத்தில் 63 நாட்களுக்கு பிறகு நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

தஞ்சை மாவட்டத்தில் 63 நாட்களுக்கு பிறகு நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

மீன் இனப்பெருக்க காலம் என அரசு அறிவித்து ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.

நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் தான் மீன்பிடி தொழில் செய்ய முடியும். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி படகுகள் அனைத்தும் மராமத்து செய்து வர்ணம் தீட்டும் பணியிலும்,, மீன்பிடி வலைகள் சீரமைக்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். மீன்பிடி தடைக் காலம் கடந்த 14-ந்தேதி நள்ளிரவு நிறைவடைந்த நிலையில் மறுநாள் வியாழக்கிழமை என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து 63 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் நேற்று மிகுந்த ஆர்வத்தோடு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இதனால் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் துறைமுக கடைக்காரர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைய உள்ளனர்.


Next Story