ரத்தக்காயத்துடன் கிடந்த வாலிபர் உடல்


ரத்தக்காயத்துடன் கிடந்த வாலிபர் உடல்
x

ரத்தக்காயத்துடன் கிடந்த வாலிபர் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

தென்னிலை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி. விவசாயியான இவர், நேற்று காலையில் அப்பகுதியில் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தின் அருகே உப்புபாளையத்தைசேர்ந்த சிவபால் (வயது 35) என்பவர் ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வீராசாமி தென்னிலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் தலைமையில் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தென்னிலை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. நாய் சிவபாலின் உடலை மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி சென்று படுத்து கொண்டது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் போலீசார் சிவபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து, சிவபாலன் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story