சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு


சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு
x

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே எளம்பலூர் சமத்துவபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் அய்யார். இவரது மகன் அருள் (வயது 22). இவர் 17 வயதுடைய சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமியை குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அருள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல குழு உறுப்பினர் ஒருவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்து அருளை நேற்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story