மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

கடையநல்லூர் அருகே மூதாட்டியிடம் மர்மநபர் சங்கிலியை பறித்துச் சென்றார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் கற்பக சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி சிவன் அம்மாள் (வயது 70). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேலக்கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில் திருவிழாவுக்கு சென்றார். இரவில் சப்பர ஊர்வலத்தில் சிவன் அம்மாள் சாமி கும்பிடுவதற்காக வந்தபோது அவரின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர் பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





