டிரைவர் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை


டிரைவர் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை
x

டிரைவர் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

டிரைவர் தற்கொலை

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 61). இவருடைய மனைவி அமுதா (50). இவர்களின் மகன் பால்ராஜ் (36). டிரைவராக வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 2 குழந்தைகள் உள்ளனர்.

மதுவுக்கு அடிமையான பால்ராஜ், அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பால்ராஜ் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று பால்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

துக்கத்தில் தாயும் தற்கொலை

இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் இருந்த அமுதா, அன்று மாலையே ரத்தக்கொதிப்புக்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றார். இதில் மயங்கி விழுந்த அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவங்கள் குறித்து ரங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மகனும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story