வெட்டி கூறுபோட்ட ஆட்டு தலை, இறைச்சியுடன் புகார் அளித்த விவசாயி


வெட்டி கூறுபோட்ட ஆட்டு தலை,  இறைச்சியுடன் புகார் அளித்த விவசாயி
x

குடியாத்தம் அருகே வெட்டி கூறுபோட்ட ஆட்டு தலை, இறைச்சியுடன் சென்று புகார் அளித்த விவசாயியால் பரபரப்பு.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40) விவசாயி. குடியாத்தம் உழவர் சந்தையில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டாக கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக ஒரு ஆடு வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது ஆட்டை காணவில்லை. இதனையடுத்து கிராமப்பகுதியில் தேடியபோது அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் ஆட்டை வெட்டி கூறு போட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதைத்தொடர்ந்து கூறுபோட்ட ஆட்டின் இறைச்சி, தலை உள்ளிட்டவைகளுடன் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு முருகன் சென்று தனது ஆட்டை கொன்று கூறுபோட்டதாக மூன்று பேர் மீது புகார் அளித்தார்.

அதன்பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். ஆட்டு இறைச்சி மற்றும் ஆட்டுதலையுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story