குமரி கடலில் பலத்த காற்று எச்சரிக்கை: குளச்சல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


குமரி கடலில் பலத்த காற்று எச்சரிக்கை: குளச்சல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x

குமரி கடலில் பலத்த காற்று என வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து குளச்சலில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கன்னியாகுமரி

குளச்சல்:

குமரி கடலில் பலத்த காற்று என வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து குளச்சலில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

குளச்சல் மீன்பிடி துறைமுகம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. இந்த விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இதையடுத்து குளச்சல் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து அந்த விசைப்படகுகள் மீண்டும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவை அனைத்தும் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.இதேபோல், வள்ளங்களும், கட்டுமரங்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஒரு சில வள்ளங்கள் மட்டும் மீன்பிடிக்க சென்றன. அவற்றில் குறைவான மீன்களே கிடைத்தன. இதனால் குளச்சல் துறைமுகத்தில் நேற்று மீன்வரத்து குறைந்து காணப்பட்டது.


Next Story