வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 25). இவர் திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். திருச்சி மாவட்டம் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாப்பாத்தி (21). இவர் பி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

இந்தநிலையில் பாப்பாத்தி, தர்மத்துப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவருக்கும், முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. ஆனால் இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரண்டு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முருகனின் பெற்றோர் காதலை ஏற்றுக்கொண்டதால் மணமக்களை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.


Next Story