பூச்சி மருந்தை குடித்தவர் சாவு


பூச்சி மருந்தை குடித்தவர் சாவு
x

பூச்சி மருந்தை குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50). இவர் உடல்நிலை சரியில்லாததால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் இவர் திடீரென வீட்டில் உள்ள பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story