தோட்டத்தில் மின்ஒயர் திருடியவர் கைது


தோட்டத்தில் மின்ஒயர் திருடியவர் கைது
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி அருகே தோட்டத்தில் மின்ஒயர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி பகுதியில் சித்திரை செல்வன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த 35 மீட்டர் காப்பர் ஒயரை மர்ம நபர் திருடி சென்றார்.

இதுகுறித்து தோட்டத்தில் பணியாற்றி வந்த வெள்ளத்துரை என்பவர் தட்டப்பாறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பேரூரணியை சேர்ந்த செல்லப்பா மகன் சதீஷ்குமார் (22) என்பவர் ஒயரை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட ஒயரையும் மீட்டனர்.


Next Story