விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு


விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x

செல்போனில் பேசியதை கண்டித்ததால் விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவரது மகள் சரண்யா (வயது 23). பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் வீட்டில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை தாயார் மனோன்மணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சரண்யா கடந்த 11-ந்் தேதி எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரி கார்த்திகா நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story