பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
x

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்

திருப்பத்தூர்

ஆம்பூர்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பால்வண்ணன் (வயது 56). இவர், அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் பால்வண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story