பரமத்திவேலூர் அருகேகார் பட்டறையில் திருடிய வாலிபர் கைது


பரமத்திவேலூர் அருகேகார் பட்டறையில் திருடிய வாலிபர் கைது
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 40). இவர் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே கார் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று பட்டறையில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த ஒருவர் கார் உதிரி பாகங்களை திருடி அவரது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், வள்ளுவர் நகரைச் சேர்ந்த லோகநாதன் (27) என்பது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் லோகநாதன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story