வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

திசையன்விளை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை அருகே உள்ள விஜயஅச்சம்பாட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 24). இவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் விஷ்ணு இதை ஏற்று ராமகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் போலீசார் வழங்கினார்கள்.


Next Story