திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

சங்கரன்கோவில் அருகே திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்புத்தூர் இந்திரா காலனியை சேர்ந்த செந்தில்நாதன் (வயது47) என்பவர் திருட்டு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரால் பொது அமைதிக்கு பக்கம் ஏற்படும் என்பதனால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை, நேற்று இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.


Next Story