மனைவியை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மனைவியை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

மனைவியை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி நெருஞ்சி காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). இவர் தனது மனைவியை மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று சுேரஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.


Next Story