3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கே.டி.சி.நகரை சேர்ந்த அருள்ராஜ் ரோஸ் ஜோசப் (வயது 54), பொன்கணேஷ் (20) ஆகியோரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் விவேகானந்தன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதனை கமிஷனர் சந்தோஷ்குமார் ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 2 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதேபோல் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மரியசிலுவை (வயது 44). இவர் மீது கொலை, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் பெருமாள்புரம் போலீசில் உள்ளது. இதனால் இவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் கமிஷனர் பரிந்துரையின்பேரில் இவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை, பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி நேற்று வழங்கினார்.


Next Story