தஞ்சை ஊராட்சி அலுவலகம் முன்பு வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீர்


தஞ்சை ஊராட்சி அலுவலகம் முன்பு வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீர்
x

தஞ்சை ஊராட்சி அலுவலகம் முன்பு வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீர்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

பாதாள சாக்கடை திட்டம்

தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆள்நுழை குழிகள்

மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டு ள்ளது. சாக்கடை நீர் வெளியேற்றம் ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

சாலையில் ஓடும் கழிவுநீர்

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு பனகல் கட்டிடம் அருகே சாலையில் கழிவு நீர் வழந்தோடுகிறது.இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த நிலை நீடிப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story