சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு புத்தகத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடம்: மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்


சிபிஎஸ்இ  6-ம் வகுப்பு  புத்தகத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடம்: மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்
x

உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், சாதி பேதத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது.

பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது. பேதமற்ற சமுதாயம் அவசியம் என்று கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளியில், மனிதர்களிடம் சாதி பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான பாடத்தைக் கற்றுத் தருவது கடும் கண்டனத்துக்குரியது.

உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story