தலையில் கல்லை போட்டு கணவன் கொடூர கொலைதினமும் குடிபோதையில் தகராறு செய்ததால் பெண் ஆத்திரம்


குடிபோதையில் தினமும் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண் கணவனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

குடிபோதையில் தினமும் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண் கணவனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

மதுவுக்கு அடிமை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் பகுதியை சேர்ந்த நடேசன் மகன் சீராளன் (வயது 38). அதே பகுதியில் இவர் 'சவுண்டு சர்வீஸ்' நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சீராளன் மதுவுக்கு அடிமையாகி குடிபோைதயில் வீட்டுக்கு வந்ததால் அவருக்கும் மனைவி ேஷாபனாவுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் சீராளன் மது போதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கொலை

இதில் ஆத்திரமடைந்த ஷோபனா, அங்கிருந்த கட்டுக்கல்லை எடுத்து சீராளன் தலை மீது போட்டதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து ஷோபனா, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உளுந்தை கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மகன், மகளை அழைத்து சென்று விட்டுள்ளார்.

பின்னர், மப்பேடு போலீசில் கணவனை கொலை செய்து விட்டதாக கூறி நேற்று காலை சரணடைந்தார்.

இதனிடையே கொலை குறித்து அறிந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல், தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சீராளன் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

பிரேத பரிசோதனை

பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சீராளனை கொலை செய்தது அவரது மனைவி ேஷாபனா என்பதும் அவர் மப்பேடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தக்கோலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட ஷோபனாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஷோபனா தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து பலமுறை வேண்டாம் என்று தெரிவித்த போதும் அதை பொருட்படுத்தாமல் தினமும் குடித்துவிட்டு வந்து பலமுறை தன்னையும் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிவித்தார். அதனை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் பின்னர் ஷோபனாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story