விழுப்புரம் அருகேகிணற்றில் தவறி விழுந்த பெண் பலி


விழுப்புரம் அருகேகிணற்றில் தவறி விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 30 July 2023 6:45 PM GMT (Updated: 30 July 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி தேவி (வயது 36). இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றில் இறங்கினார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தேவியின் தந்தை அய்யனார் காணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story