கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி


கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 15 Aug 2023 6:45 PM GMT (Updated: 15 Aug 2023 6:45 PM GMT)

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

கடலூர்


சிறுபாக்கம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி சுதா (வயது 35). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் சுதா வேப்பூர் அருகே கீழக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் மேலக்குறிச்சியில் உள்ள ஒரு கிணற்றில் சுதா தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story