தொழிலாளி லாரி சக்கரத்தில் சிக்கி சாவு


தொழிலாளி லாரி சக்கரத்தில் சிக்கி சாவு
x

ஓமலூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி, லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

சேலம்

ஓமலூர்

செங்கல் சூளை தொழிலாளி

ஓமலூர் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் செங்கல் சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

ஓமலூரில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது திடீரென அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதனால் அவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினார்.

பலி

இதில் தலை நசுங்கிய அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story